ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த ஆசிரியராக ராஜாவூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு  மனிதநேய விருது வழங்கிய  மாவட்ட ஆட்சியர்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் உதவும் உள்ளங்கள் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மனிதநேய விருது வழங்கும் விழா திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.‌ இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் இந்திரா என்பவருக்கு சிறந்த மனிதநேயர் என்ற‌ விருதினை வழங்கினார். இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், உதவும் உள்ளங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று எழுத்துச் சித்தர் என்றழைக்கப்பட்ட பாலகுமாரன்  நினைவு தினம் இன்று...
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3753 பள்ளிகள், 82 கல்லூரிகள் மூடப்பட்டது.
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பண்பலை எனப்படும் எஃப்.எம். FM – Frequency Modulation வானொலி ஒலித்த நாள் இன்று....
Image