திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..

சுந்தரம்பள்ளி பகுதியில் கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுந்தரம்பள்ளி கிராமத்தில் அதிமுக,திமுக,பாஜக கட்சியில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று கந்திலி தெற்கு ஒன்றிய செயளாளர் ஏ.ஜெ.சக்தி முன்னிலையில் வேலூர் தெற்கு மாவட்ட செயளாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அப்போது அப்பகுதியில் கட்சியின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வில் இரட்டை வேஷம் போடும் மாநில மற்றும் மத்திய அரசை உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தில் நீட் தேர்வால் 13 மாணவர்களின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டியும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர செயளாளர் ஆனந்தன்,கந்திலி ஒன்றிய பொருளாளர் சங்கர்,திருப்பத்தூர் தொகுதி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் மணி,சுந்தரம்பள்ளி முகாம் பொருப்பாளர்கள் விஜியன், சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடன் இருந்தனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே...இன்று எழுத்துச் சித்தர் என்றழைக்கப்பட்ட பாலகுமாரன்  நினைவு தினம் இன்று...
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3753 பள்ளிகள், 82 கல்லூரிகள் மூடப்பட்டது.
Image
வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே....பண்பலை எனப்படும் எஃப்.எம். FM – Frequency Modulation வானொலி ஒலித்த நாள் இன்று....
Image