நாட்டறம்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிய மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ்..

நாட்றம்பள்ளியில் பாரத பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய மாவட்ட தொழில் பிரிவு தலைவர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட அதிபெரமனூர் பகுதியில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்த நாள் விழா திருப்பத்தூர் மாவட்ட தொழில் துறை பிரிவின் தலைவர் குருசேவ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஊர் மாரியம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நலமுடன் வாழ சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து நாட்டறம்பள்ளி பகுதியில் பிரதமரின் 70 வது பிறந்த நாளை குறிப்பீடும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழா இறுதியில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாட்டறம்பள்ளி பாஜக ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி துணை தலைவர் மீனாட்சி, ஒன்றிய இளைஞரணி தலைவர் லோகேஸ்வரன், ஒன்றிய பொதுச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய மகளிர் அணி தலைவர் செல்வி, மாவட்ட ராணுவ பிரிவு தலைவர் கனகராஜ், மாவட்ட ஓபிசி பிரிவு அணி தலைவர் ரமேஷ் உட்பட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image