திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி..


*திருப்பத்தூரில் காவல் துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினர்.* திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது.‌ இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பரிசு தொகை வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்றது. அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.‌ இறுதியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image