பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் 150 செடிகள் நடவு மற்றும் குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிர்வாகிகள்... July 24, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் 150 செடிகள் நடவு மற்றும் குளம் தூர்வாரும் பணியை மேற்கொண்ட நிர்வாகிகள்... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி புலிகுட்டை பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மிகவும் பழைமையான பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள குளம் தூர்வாரும் பணி மற்றும் அப்பகுதியில் வேம்பு, புங்கை, அரசமரம், பூவரசன் போன்ற செடிகள் நடவு பணி நடைபெறுகிறது. இதில் பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவன தலைவர் சத்தியராஜ், துணை தலைவர் மூவேந்திரன், செயலாளர் வெங்கடேசன் துணைச் செயலாளர் இளவரசன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் பசுமை தாய்நாடு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி. சரவணன்...