வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு தற்காலிக சாலை அமைத்து சென்ற அமைச்சர்கள்.. June 23, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மலை கிராமமான நெக்னாமலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்று கடந்த 72 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை என்ற பல்வேறு போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த மலை கிராம மக்களுக்கு தற்பொழுது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மண் சாலையை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல் , மாவட்ட ஆட்சியர் சிவனருள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் தற்காலிக சாலை வழியாக மலை கிராமத்திற்கு வந்தனர் அவர்களுக்கு மலை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்*இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...