வாணியம்பாடியில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதித்த கோட்டாட்சியர்... June 23, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் வாணியம்பாடியில் வீதி வீதியாக சென்று முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்த வருவாய் கோட்டாட்சியர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ரபாத், சலாமாபாத்,பாஷீராபாத், ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் குழுக்களாக சென்று வீதி வீதியாக சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக் கவசம் அணியாமல் இருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தனர் தொடர்ந்து அந்தந்த பகுதியில் கூட்டமாகவும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் என ஏராளமானோரை விரட்டினர்இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- கோவி.சரவணன்...