ஜோலார்பேட்டை அருகே திமுக மகளிரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா... June 03, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திமுக மகளிரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 97 வது பிறந்தநாள் விழா.. பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக திமுக கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாச்சல் ஊராட்சி அம்பேத்கர் நகர் மற்றும் புள்ளானேரி ஊராட்சியில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி தலைமையில் கலைஞரின் பிறந்தநாள் விழா அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் இந்திரஜித், முன்னாள் தலைவர் சதீஷ்குமார், கிளை செயலாளர் ராஜா, மற்றும் சின்ன தம்பி, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்... இறுதியில் பொதுமக்களும் மற்றும் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது....இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..உங்கள் தமிழ் சுடர் காலை நாளிதழ்...