கொரோனா நோய்த்தடுப்பு பணிக்காக உழைத்த மருத்துவர்களின் பணி பாராட்டுக்குரியது அமைச்சர் நிலோபர் கபில்... June 05, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்களுக்கு இணையாக தூய்மைப் பணியாளர்களின் பணி போற்றதக்கது என அமைச்சர் நிலோபர் கபில் புகழாரம் வாணியம்பாடி ஜூன் 05 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் ஆலங்காயம் ஒன்றியத்தில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் இதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திடலிலுக்கு வரவழைக்கப்பட்டனர். பின் போதிய சமுக இடைவெளியையுடன் அமர வைக்கப் பட்ட பின்னர் தூய்மை பணியாளர்கள் டேங்க் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்ட 350 பேருக்கு அரிசி, மளிகை ,சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி விழாவில் பேசிய அமைச்சர் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்களுக்கு நிகராக தூய்மைப் பணியாளர்களின் பணி போற்றதக்கது என அமைச்சர் நிலோபர் கபில் பாராட்டி பேசினார்.. விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆலங்காயம் கழக நிர்வாகிகள் மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆலங்காயம் வட்டார மருத்துவர் பசுபதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்