ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் சார்பு ஆய்வாளர் பலி... June 11, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் சார்பு ஆய்வாளர் பலி... நெல்லை மாவட்டம் வீரகேரளம் புத்தூரைச்சேர்ந்தவர் சாலமன் வேத மணி இவர் சுரண்டை காவல் நிலைய்ததில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் இவருடைய மகன் பிரதீஸ் சார்பு ஆய்வாளராக காவல் துறையில் 2016 ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார்இவர் தற்போது சென்னை தலைமை செயலகத்தில் ரோவிங் யூனிட்டில் சார்பு ஆய்வாளராக பணியில் உள்ளார் இந்நிலையில் நான்கு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊருக்கு வந்துள்ளார் நேற்று தனது ஊரிலிருந்து மதுரைக்கு செல்ல தனதுஇருசக்கர வாகனத்தில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டி அருகே சொல்லும்போது எதிரே வந்த டிப்பர் லாரி கிராவல் ஏற்றிக்கொண்டு திரு வில்லிபுத்தூர் நோக்கி வந்தபோது நேருக்கு நேர் மோதியது இதில் சார்பு ஆய்வாளர் பிரதீஸ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் தகவலறிந்து நத்தம்பட்டி காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி திரு வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்து வழக்குப்பதிந்து டிப்பர் லாரி டிரைவர் ஞானகுருவை கைது செய்து விசாரித்து வருகின்றனர் விபத்தில் இறந்த சார்பு ஆய்வாளர் பிரதீஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு திரு வில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது... இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... செய்திகள்- தமிழ் சுடர் காலை நாளிதழ்...