ஜோலார்பேட்டையில் 27கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். June 08, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் *ஜோலார்பேட்டையில் 27கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.* திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே பார்சம்பேட்டை கேட் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி நீண்ட கால கோரிக்கையான 27 கோடி ரூபாய் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் வழியாக வாகனயோட்டிகள் எவ்விதம் சிரமமின்றி உற்சாகத்துடன் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர செயளாளர் எஸ்.பி.சீனிவாசன் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...செய்திகள்- கோவி.சரவணன்..