திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வேறு தேதிக்கு மாற்ற கோரி திமுக மாணவரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் மனு... May 20, 2020 • தமிழ் சுடர் காலை நாளிதழ் திருப்பத்தூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரி திமுக மாணவரணி சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு... தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மாதம் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அப்போது பள்ளி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொரோனா வைரஸ் பிரச்சினை முடியும் வரை தேர்வு ரத்து செய்யப்பட்ட வேண்டும் என அறிக்கை விட்டார்.இந்நிலை திருப்பத்தூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் ரத்து செய்து கொரோனா பிரச்சினை முடியும் வரை மாணவர்களின் நலனைக் காக்க தேர்வு மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனிடம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அப்போது உடன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் மற்றும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பிரேம்குமார்,வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்... இதுபோன்றசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..செய்திகள்- கோவி.சரவணன்...