வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடை கூட்டமே இல்லாததால் மந்தநிலையில் விற்பனை...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் அடுத்த காவலூர் சத்திரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது காலை முதலே கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு டாஸ்மார்க் கடை சீல் அகற்றப்பட்டு விற்பனை தொடங்கியது பிற மாவட்டம் பிற பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்ட நிலையில் இம் மலை கிராமத்தில் கூட்ட நெரிசல் இல்லாமல் மக்கள் மற்றும் மது குடிப்பவர்கள் யாரும் சரியாக முன்வரவில்லை அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் கடை சுற்றிலும் விவசாய நிலம் உள்ளதால் பல்வேறு முறை போராட்டங்கள் நடைபெற்று எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 கடைகள் உள்ள நிலையில் 15 கடைக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி தரப்பட்டு தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது இதில் ஏழு நாட்களுக்கு ஏழு வண்ணம் உள்ள டோக்கன்கள் சுமார் 500 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து இன்று மது பிரியர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது இதில் ஒருவருக்கு 4 பாட்டில்கள் மட்டும் கொடுக்கப்பட்டு 2000 மதுபான பாட்டில்கள் விற்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது ஆதார் அட்டை மற்றும் முக கவசம் அணிந்து வந்து பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...