தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன்..
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய வைரஸான கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனர். அந்தவகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ் நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் கலந்துகொண்டு ஆதரவற்ற ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் கல்யாணம், மாவட்ட தலைவர் இந்திரகுமார், மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன், உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்தி- கோவி.சரவணன்...