திருப்பத்தூர் அருகே உணவின்றி தவித்த பார்வையற்றவர்களுக்கு வீடு தேடி உதவி செய்த காவல் ஆய்வாளர்..
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் வெளிமாநிலம் தொழிலாளர்கள் மற்றும் புரத்தார் வட்டம் பகுதியில் வசிக்கும் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றோர், அப்பகுதியில் உள்ள கூலித் தொழிலாளிகள் என 20க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றி தவித்து வருவதாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் மதனலோகன் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனது சொந்த செலவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தானே நேரில் சென்று வழங்கினார். மேலும் இவர்களுக்கு தொடர்ந்து காய்கறிகள், உணவுப் பொருட்கள் காவல் துறை சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் எந்த நேரத்திலும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அப்பகுதி மக்களிடம் கூறினார்.
அப்போது உதவி ஆய்வாளர் ராணி மற்றும் காவலர் தமிழ்வாணி ஆகியோர் உடன் இருந்தனர். தானத்தில் சிறந்தது அன்னதானம் ஆகும். 20க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றி தவிப்பதை அறிந்து அவர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கரம் கொடுத்த ஆய்வாளர் மதன லோகன் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...