ஆம்பூரில் ஆர்டிஎஸ் குழுமம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் நகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 36 வார்டுகளிலும் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு ஆர்டிஎஸ் குழுமம் சார்பில் தலைவர் திரு சரவணன் அவர்கள் தலைமையில் முன்னிலை ஆர்டிஎஸ் பாலாஜி மற்றும் ஆர் டி எஸ் குழும பணியாளர்களுடன் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு சிவனருள் அவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு விஜயகுமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தலா ரூபாய் 600 மதிப்பிலான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள், 400 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு
ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவல்லி மற்றும் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நன்றியுரை RDS மேலாளர் பிரபு கூறினார்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...