புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு உதவும் இளைஞர்கள்...
முழு ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்று வரை சேவை மனப்பான்மையோடு ஏழை மக்களுக்கு முக கவசம், உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கி வரும் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா என்ற அமைப்பின் பொறுப்பாளர் சிவபாலன் அவர் கூறுகையில்..
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்க்குட்பட்ட கட்டுமாவடி பகுதிகளில் மீனவர்கள் அதிகம் உள்ள பகுதி இங்கு மீன் பிடி தொழிலை நம்பி மீனவர்கள் அதிகம் உள்ளனர். தற்போது அரசு ஊரடங்கை அறிவித்த நாள் முதல் மீன்வளத் துறையின் மூலம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினம் மட்டுமே மீன் பிடிக்க ஒரு சில கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. கடலில் பிடித்த மீன்களை விற்பனை செய்யும் போது மீனவர்கள் பொது இடத்தில் மீன் விற்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து கட்டுமாவடி முதல் கோட்டை பட்டினம் வரை உள்ள மீனவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.. இது மட்டும் அல்லாமல் மத்திய அரசால் அங்கீகாரம் செய்யப்பட்ட இளைஞர் மற்றும் மகளீர் மன்றம் மூலம் தொடர்ந்து முக கவசம் தயார் செய்து அதை மக்களுக்கு வழங்கி வருகிறோம் என்று கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- செந்தில்குமார்...