வேலூரில் கொரேனா நிவாரண உதவி வழங்கிய முன்னாள் பேரூராட்சி துணை தலைவர்...
வேலூர் மாநகராட்சி காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 57 வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர், முன்னாள் பேரூராட்சித் துணைத் தலைவர் D.மேகநாதன் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். உடன் அம்மா பேரவை வெங்கட்ராமன், ஊர் நாட்டாமை தாமரை, வேலூர் மார்க்கெட் கமிட்டி தலைவர் சீனிவாசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மீனவர் அணி செயலாளர் கலியபெருமாள், வேலூர் மாநகராட்சி நடைப்பாதை வியாபாரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேண்பாக்கம் பகுதி மேகா என்கிற மேகநாதன் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி. சரவணன்...