விதவை மற்றும் இருளர் 705 குடும்பங்களுக்கு ரூ.9.97 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எ.சி.டி.எஸ் சார்பில் வழங்கினர்...

விதவை மற்றும் இருளர் 705 குடும்பங்களுக்கு ரூ.9.97 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் எ.சி.டி.எஸ் சார்பில் வழங்கினர்...


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுரை அடுத்த கண்டிகையில் உள்ள ஏசிடிஎஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கு காரணமாக காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வேங்கடமங்கலம் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம், குமிழி மற்றும் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டையூர், ஆமூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாற்று திறனாளிகளின் குடும்பங்கள், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட குடும்பங்கள், இருளர் குடும்பங்கள் என மொத்தம் 705 குடும்பங்களுக்கு 9.97 லட்சம் ரூபாய் செலவில் அரிசி, பருப்பு, ஆயில், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சக்கரை, குளியல் சோப்பு, துணி சோப்பு, மற்றும் கை கழுவதற்கற்கான கிருமி நாசினி என ரூபாய் 1365 மதிக்க தக்க பொருட்கள் வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக காட்டாங்கொளத்தூர் ஒன்றிம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள மாற்று திறனாளிகள் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு மே தினத்தை முன்னிட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏ சி டி எஸ் தொண்டு நிறுவனத்ததின் இயக்குநர் முனைவர் தே. தேவன்பு தலைமையில் வண்டலூர்  வட்டாட்சியர் செந்தில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலக்குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர் தாமோதரன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. 


செய்திகள்- உத்தமன்-


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image