ஜோலார்பேட்டை அருகே உறவினர்களுக்கு துணை போகும் ஊராட்சி செயலாளர். கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்...

புதுப்பேட்டை ஆற்றுப் படுகையில் தனி நபர் ஒருவரால் தேங்கி நிற்கும் கழிவுநீர்! உறவினர்க்கு துணை போகும் ஊராட்சி செயலர் சீனிவாசன்...


 


 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட  புதுப்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் அருகில் செட்டேரிடேம் வழியாக அம்மனாங்கோயில் ஏரிக்கு சென்றடைகிறது. இது சில வருடங்களாக தண்ணீர் இல்லாத காரணத்தினால் இந்த ஆற்றுப்படுகையில் அதே பகுதியைச் சேர்ந்த  மணிவண்ணன் என்பவர் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி அதனை சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாடகைக்கு விட்டு கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்று ஓடையில் கலக்கும் வகையில் பைப் லைன் அமைத்து நாள்தோறும் இந்த ஆற்று படுகையில் கலந்து விடுகிறார் . இதனால் அப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நோய்த்தொற்று ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 50 வருட காலமாக அருகில் உள்ள குடிநீர் கிணற்றில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த கிணற்றில் மூலமாக குடிநீர் பெற்று வந்தனர் இந்த கழிவுநீர் கலப்பதால் இந்த ஆற்று படுகையில் இருந்து அருகில் உள்ள கிணற்றிலும் இந்த சாக்கடை கலப்பதினால் நான் 50 குடும்பங்களுக்கும் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் சீனிவாசனிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில். ஊராட்சி செயலர் சீனிவாசனும், மணிவண்ணனும் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். இதன் காரணமாகவே சீனிவாசனின் முழு ஒத்துழைப்புடன் மணிவண்ணன் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வரும் கழிவு நீரை சுமார் 100 மீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆற்றுப்படுகையில் கலக்கும் வகையில் பைப் லைன் அமைத்துள்ளார். நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொசு தொல்லை அதிகமாகி பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் மழைத் தண்ணீரும் கழிவுநீரும் கலந்து ஆற்றில் தேங்கியுள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.. இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சீனிவாசனிடம்  கேட்டபோது. இச்சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது இந்த பிரச்சனை குறித்து ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தவிர எனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தனது கடமையை தட்டிக் கழித்து ஆவேசமாக கூறினார்.. தற்பொழுது தமிழகம் முழுவதும் அசுரவேகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கழிவுநீரை ஓடையில் கலந்து துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளது. தனி ஒரு நபரின் செயலால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வரை பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதை சரிசெய்ய ஒன்றிய நிர்வாகம் முன்வருமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் தமிழ் சுடரில் காலை நாளிதழுடன் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்... 


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image