ஜோலார்பேட்டையில் நாள்தோறும் 200 நபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கி வரும் பாஜக மாவட்ட செயலாளர் ஐஸ்வர்யாவுக்கு குவியும் பாராட்டுக்கள்...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் ஆதரவுற்ற முதியோர்கள் உணவின்றி தவித்து வருவதை அறிந்த பாஜக பாஜக மாவட்ட செயலாளர் ஐஸ்வர்யா ஏற்பாட்டில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை, பாய்ச்சல் ஊராட்சி முழுவதும், பெரிய கம்மியம்பட்டு, அண்ணா நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு கடந்த 20 நாட்களாக தொடர்ந்து 200 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள், மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். அத்துடன் மத்திய உணவாக மேற்கண்ட பகுதிகளில் உணவு பொட்டலங்களை அவரவர் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர். இதில் பொதுச்செயலர் கண்ணன், ஒன்றிய தலைவர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரு பெண் நிர்வாகி தொடர்ந்து 20 நாட்களாக கொரோனா நிவாரண உதவி செய்து வருவதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...