பையனூர் ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி சார்பில் 2 லட்சம் மதிப்பீட்டில் கொரானோ நிவாரண உதவிகள்..

பையனூர் ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி சார்பில் 2 லட்சம் மதிப்பீட்டில் கொரானோ நிவாரண உதவிகள்..


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பையனூரிலுள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் ஆறுபடைவீடு பொறியியல் கல்லூரி  நிர்வாகத்தின் சார்பாக கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரமின்றி தவித்த ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் சுமார் 250 வெளிமாநில  தொழிலாளர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்  டாக்டர் கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் அவர்களால் ரூ.2 லட்சம் மதிப்பிலான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. வளாக இயக்குனர் முனைவர் சத்தியமூர்த்தி, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.பி.சங்கீதா, ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஜெனிஃபர், கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி பத்மநாபன்  மற்றும் நாட்டுநலப் பணி திட்ட அலுவலர் பேராசிரியர் சுரேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் வழங்கினர். 


உடன் ராஜராஜேஸ்வரி வி.எ.ஒ. அல்போன்ஸ் உடனிருந்தனர். ஏற்கனவே இப்பல்கலைக்கழத்தின் சார்பாக முதலைமச்சர்  மற்றும் பிரதம மந்திரி நிவாரண நிதிக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது. கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மற்றும் தன்னார்வலத் தொண்டர்களுடன் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- உத்தமன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image