திருப்பத்தூர் அருகே 150 மாணவர்களுக்கு கொரோனா நிவாரண வழங்கிய ஆசிரியர்கள். மாவட்ட ஆட்சியர் சிவனருள் பாராட்டு...
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பசிலிக்குட்டை பகுதியில் இயக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 150 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இருக்கும் நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வீட்டில் முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் மற்றும் பெற்றோர்களின் தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி யின் முயற்சியில் அப்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் வகையில் அரிசி மற்றும் காய்கறிகள், மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு 750 ரூபாய் மதிப்புள்ள கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசம் கிருமிநாசினி வழங்கி கொரோனா வைரஸ் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பள்ளி ஆய்வாளர் தாமோதிரன், வட்டார கல்வி அலுவலர்கள் தென்னவன், உதயசங்கர், பள்ளி ஆசிரியர்கள். புவனா, சாய்பிரியா,சுமதி, ரஞ்சினி, மகாலட்சுமி,ஜெடிதாமேரி மற்றும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...