ஜோலார்பேட்டையில் திமுக மகளிரணி சார்பில் வடமாநில தொழிலாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி..
கொடிய வைரஸ் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக சார்பிலும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் கலந்துகொண்டு வடமாநில தொழிலாளிகள் மற்றும் பாச்சல் ஊராட்சி பகுதியில் ஏழைமை நிலை உள்ள மக்கள் என 350 பேர்களுக்கு அரிசி, காய்கறிகள், மாளிகை பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி போன்றவை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் அருணகிரி, ஒன்றிய துணை செயலாளர் சரவணன், பொறியாளர் அணி நிர்வாகி ஹரிஷ் புஷ்பராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...