ஜோலார்பேட்டையில் திமுக மகளிரணி சார்பில் வடமாநில தொழிலாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி..

ஜோலார்பேட்டையில் திமுக மகளிரணி சார்பில் வடமாநில தொழிலாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி..


கொடிய வைரஸ் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் திமுக சார்பிலும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில்  மாவட்ட திமுக மகளிரணி  சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் தேவராஜ் கலந்துகொண்டு வடமாநில தொழிலாளிகள் மற்றும் பாச்சல்  ஊராட்சி பகுதியில் ஏழைமை நிலை உள்ள மக்கள் என 350 பேர்களுக்கு அரிசி, காய்கறிகள், மாளிகை பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி போன்றவை பொருட்கள்  அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் அருணகிரி, ஒன்றிய துணை செயலாளர் சரவணன், பொறியாளர் அணி நிர்வாகி ஹரிஷ் புஷ்பராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image