நாட்டறம்பள்ளி அருகே 1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்...
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அகில உலகத்தையும் ரத்தமின்றி யுத்தம் செய்து வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 144 தடை உத்தரவு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலை வாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கி இருக்கும் மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என நாள்தோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் திரியாலம் ஊராட்சியில் உள்ள மக்களின் நலன் கருத்தில் கொண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிகுமார் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்கள் மற்றும் 1000 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ ன அரிசி மற்றும் காய்கறிகள், மாளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் உமா ரம்யா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாராசி, ஊராட்சி செயலாளர் பாண்டியன் உட்பட பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்....