வேலூரில் எளிய முறையில் நடைபெற்ற திருமணம் கட்சித் தலைவர் வீடியோ காலில் வாழ்த்து திருமணத்துக்கு வந்த 10 பேருக்கு உணவு பார்சல் வழங்கப்பட்டது...
வேலூர் மாவட்டம் வேலூர் ஓட்டேரி காமாட்சிபுரம் பகுதியிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளராக இருப்பவர் சசிகுமார் என்பவருக்கும் அபிநயா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க பிரமாண்டமான ஏற்பாடுகள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் குரானா வைரஸ் தாக்குதலில் இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் திருமணம் தேதி குறிப்பிட்ட அதே நாளில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்திற்கு அவருடைய உறவினர்கள் மட்டும் பத்து பேர் பங்கேற்றனர் திருமணம் முடிந்த பிறகு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் திருமணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவுகளை பார்சலில் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...