வாணியம்பாடி நகராட்சியில் திமுக சார்பில் நகராட்சி பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கிய மாவட்ட செயலாளர்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய துப்புரவு பணியாளர் மற்றும் சுகாதார துறை சார்ந்த பணியாளர்களுக்கும் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி, சோப்பு கையுறை உள்ளிட்ட பொருட்களை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று தலைமை மருத்துவர் அம்பிகா அவர்களை சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கை எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தார் இந்த நிகழ்வில் வாணியம்பாடி திமுக நகர பொறுப்பாளர் சாரதிகுமார், நகராட்சி ஆணையர் சுசீல் தாமஸ், வட்டாட்சியர் சிவபிராகாஷம் ஆலாங்காயம் வட்டார மருத்துவர் பசுபதி, மருத்துவர் செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன். அரவிந்தன்...