திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு பணிக்காக முககவசம், கிரிமிநாசினி, மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் வழங்கிய தனியார் வங்கி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேலும் நோய் தொற்று பரவாமலிருக்க திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் ஆகிய நகர பகுதிகளில் முழுகட்டுபாட்டு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சார்பில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வரும் தூய்மை பணியாளர்கள் பயன் பெறும் வகையில் 5000 முக கவசங்கள், கிருமி நாசினி, கையுறைகளை திருப்பத்தூர் தனியார் வங்கியின் மேலாளர் திருநாவுக்கரசு மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் தனியார் வங்கி துணை மேலாளர் மேகநாதன், சிலம்பரசன் ,ஹேமநாத்,கோபி உட்பட வங்கி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...