வாணியம்பாடியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை...
மூன்றாம் உலகப்போர் வரும் என பல நாட்கள் நாம் பேசியது உண்டு ஆனால் அது எப்படி வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சீனாவில் தொடங்கி இன்று உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொடிய வைரசயான கொரோனா வைரஸ் என்ற ரூபத்தில் தற்பொழுது உலக அளவில் மூன்றாம் உலகப் போர் உருவாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் கணபதி தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடிய வைரசயான
கொரானா வைரஸ் தொற்று பொதுமக்களுக்கு பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வாணியம்பாடி பகுதியில் கொரோனா விழிப்புணர்வுக்காக பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் மற்றும் வாணியம்பாடி உழவர்சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தூய்மையாக இருக்க கைகளில் சேனிடைசர் எனப்படும் கிரிமிநாசினி மூலம் கைகளை கழுவி பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களின் கைகளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தாங்களே கைகளை கழுவி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...