வாணியம்பாடியில் தனியார் கல்லூரி மற்றும் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்  வீடு திரும்பினர்...

வாணியம்பாடியில் தனியார் கல்லூரி மற்றும் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வர்கள்  வீடு திரும்பினர்...


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 52நபர்களை தனிமைப்படுத்த  மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும்   மாவட்ட  சுகாதாரத்துறை  துணை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி மற்றும் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தனிமைபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு உரிய முறையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதன்பேரில் அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என   தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் 52 நபர்கள் தங்கள் வீட்டில் தங்களைத்தானே   தனிமைபடுத்தி கொள்ள அறிவுரை வழங்கி வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது  தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர். நிலோபர் கபில், வாணியம்பாடி  வருவாய் கோட்டாட்சியர்,  வட்டாட்சியர்,வட்டார மருத்துவ அலுவலர்,நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட பலர் உடன் இருந்தனர்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்... 


செய்திகள்- கோவி.சரவணன்....


Popular posts
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image