ஒரு லட்சம் மதிப்பிலான முக கவசம் மற்றும் கையுறை அடங்கிய தொகுப்பினை  தூய்மை காப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கி திருப்பத்தூர் எம்எல்ஏ....

ஒரு லட்சம் மதிப்பிலான முக கவசம் மற்றும் கையுறை அடங்கிய தொகுப்பினை  தூய்மை காப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கி திருப்பத்தூர் எம்எல்ஏ....


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திமுக தலைவர் ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கையால் வாழ்வாதாரங்களை இழந்து வரும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் ஒரு மாத ஊதியத் தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வங்கி காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எம்எல்ஏ நல்லதம்பி மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம்  வழங்கினார். அதன்பின் தனது தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர்   மற்றும் கந்திலி ஒன்றியங்களில் உள்ள  54 ஊராட்சிகளில் பணியாற்றி வரும் 650 தூய்மை காப்பாளர்கள் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி வார்டு வாரியாக வீடு வீடாக தொற்றுநோய் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் 160 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் தன்னார்வலர்கள் மற்றும் காவலர்களுக்கும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தன் சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்பிலான 1400  முகக் கவசங்கள், கையுறைகள், அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்....


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image