செங்கல்பட்டில் கொரோனா நிவாரண நிதிக்காக தனது சேமிப்பு பணத்தை அள்ளி கொடுத்த சிறுமி..

செங்கல்பட்டில் கொரோனா நிவாரண நிதிக்காக தனது சேமிப்பு பணத்தை அள்ளி கொடுத்த சிறுமி..


தமிழ் நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரின் அருகில் உள்ள மாவட்டம்  செங்கல்பட்டு மாவட்டம் ஆகும். குறிப்பாக கொரோனா வைரஸ் அதிகம்பாதிக்கப்பட்ட ரெட் மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்டமும் உள்ளது. கொரோனா நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர், சமூக ஆர்வலர்களுக்கு கோரிக்கை வைத்தார். அதன் பேரில் பல பேர்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்  பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்,  சண்முகபிரியா தம்பதியரின்  குழந்தை செல்வி ஆர்.எஸ்.ஆதினி   பள்ளியில்  யூ.கே.ஜி சேர்வதற்கு தான் சேமித்து வைத்திருந்த தொகையான 16,260 ரூபாயை  மாவட்ட ஆட்சியர்  ஜான் லூயிஸிடம் வழங்கினார். அப்போது  உடன் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- உத்தமன்- கோவி.சரவணன்...


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image