செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில் கொரானா உதவிகள் -அதிமுக சார்பில் வழங்கினர்--
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரமின்றி தவித்த காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்டபட்ட ஆலப்பாக்கம் ஊராட்சி பீடி நகர், துளசி நகர் பகுதிகளில் ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக ஊராட்சி செயலாளருமான சல்குரு நிகழ்ச்சி ஏற்பாட்டில் சுமார் 500 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் குடும்பம் ஒன்றிற்க்கு 5 முட்டை உட்பட காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.கௌஸ் பாஷா முன்னிலையில், வழங்கினார். இந்நிகழ்வின்போது உமாபதி, கொண்டைவேலு, அன்சர்பாஷா, மனோஜ், சி.கே.பெருமாள், விஎஓ. சுதாகர், நியமத்துல்லா, ரவிக்குமார், சாதிக், மற்றும் பீடி நகர், துளசிநகர் அதிமுக கிளை செயலாளர்கள் உடனிருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்..