கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பியவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 3 நபர்களும். வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் திருப்பத்தூர் பகுதியை சார்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து அவர்அவர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்க வேலூரில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் மருத்துவர்கள், வருவாய் துறை அதிகாரிகள் பழக்கூடை மற்றும் பூங்கொத்து கொடுத்து கைத்தட்டி சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். மேலும் இவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே தொடர்ந்து தனிமைப் படுத்தி சுகாதாரத் துறையால் கண்காணிக்கப்பட உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக குறைந்தது உள்ளது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...