ஜோலார்பேட்டையில் கண் பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருவண்ணாமலை எம்பி...

ஜோலார்பேட்டையில் கண் பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கிய திருவண்ணாமலை எம்பி...


கொடிய வைரஸ் கொரோனா வைரஸ் தடுப்பு பணியின் காரணமாக மக்கள் தங்களின் வேலைகளை இழுத்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஒரு அவலநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மக்களை காக்க  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.‌ இந்நிலையில் தனது பங்கிற்காக அரசியல் கட்சிகள், தொழில் நிறுவனங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில்
  திருப்பத்தூர் மாவட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி மலை பகுதிகளில்  தங்கள்  வாழ்வாதாரங்களை இழந்துள்ள கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க  அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறிப்பாக   15 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி, காய்கறிகள்,  அடங்கிய தொகுப்பினை நாடாளுமன்ற உறுப்பினர்  அண்ணாதுரை வழங்கினார். உடன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்  தேவராஜ்,  முன்னாள் பொறுப்பாளர்  முத்தமிழ்செல்வி,மாவட்ட துணைச்செயலாளர் சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல்,  ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் அன்பழகன்,  உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்...


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image