பிரபல நடிகையின் மகன் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி போலிசார் விசாரணை...


நடிகையின் மகன் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி போலிசார் விசாரணை...


சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக மதுபானம் கிடைக்காமல் குடிநோயாளிகள் அவதிப்படுகின்றனர்.


ஒரு கட்டத்தில், மதுவுக்கு அடிமையான சிலர் விபரீத முடிவுகளை எடுக்க உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. குடிநோயாளிகள் மதுக்கடையில் திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.


இந் நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி நீண்ட நாட்களாக மதுவுக்கு அடிமையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபானம் கிடைக்காமல் விரக்தியடைந்து, அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.


ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பூபதி சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி.சரவணன்....


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image