வாணியம்பாடியில் அதிமுக வர்த்தக அணி சார்பில் ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அரிசி வழங்கினார்.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடந்த 38 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரமின்றி தவிக்கும் ஏழை எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அதிமுக வர்த்தக பிரிவு மாவட்ட அலுவலகத்தில வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்கள் என 500 பேருக்கு அரிசி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கி தொடங்கி வைத்தார் பின்னர் அப்பகுதி முழுதும் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் சதாசிவம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஆர் வி குமார் நகர அவைத்தலைவர் சுபான் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்- அரவிந்தன்...