திமுக பிரமுகரும் சமூக ஆர்வலருமான கே.ஏ.டி. டிரான்ஸ்போர்ட் நிறுவனர் அன்பு எற்பாட்டில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு
ரூ.2.50 லட்சம் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை திருப்போரூர் தொகுதி எம்.எல்.எ.இதயவர்மன் வழங்கினார்-
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை பிறப்பிக்கப் பட்டதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கேளம்பாக்கம் திமுக பிரமுகரும் சமூக சேவகருமான டிரான்ஸ்போர்ட் நிறுவனர் கே ஏ டி அன்பு ரூ.2.50 லட்சம் மதிப்பில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை கேளம்பாக்கம் ஊராட்சி ஜோதி நகர் 9 வது வார்டிலுள்ள 700 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் கேளம்பாக்கம் வாசுதேவன், சாத்தான் குப்பம் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், வெங்கடேசன், பிரவீன், விஜி, ஜோதி நகர் பகுதியை சேர்ந்த நடராஜ், கனகராஜ், லதா, ஐயப்பன், அஸ்கரலி, ஏழுமலை, சந்திரசேகர், வேணு, உள்பட ஏராளமானோர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...