உலக சுகாதார அமைப்பில் தலைமைப் பொறுப்பு.. கெத்து காட்டும் இந்திய அரசு..
அடுத்த மாதம் உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் இந்தியா தலைமைப் பொறுப்பேற்கும் என்று இந்த விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்றுநோயை தடுக்க ஐநா அமைப்பு போராடி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் தலைவராக இந்தியாவை நியமிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கொரோனா தொற்றுநோய் ஏற்கனவே உலகளவில் 1,80,000’க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் 2.6 மில்லியனைப் பாதித்துள்ளது. இதனால் நாடுகள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால் இந்த ஆண்டு உலக நாடுகளுக்கு 1 டிரில்லியன் டாலர் வரை செலவாகும்.
துண்டிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் மாநாட்டிற்குப் பிறகு நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் மே 22 அன்று இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். ஜப்பான் தன்னுடைய ஓராண்டு தலைமைப் பதவியை நிறைவு செய்யும் வேளையில், இந்தியா தனது ஓராண்டு காலத்தை மே மாதத்தில் முக்கியமான சமயத்தில் தொடங்க உள்ளது என டெல்லி மற்றும் ஜெனீவாவில் உள்ள தூதர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா குழு மூன்று வருட காலத்திற்கு புதுடெல்லியை நிறைவேற்றுக் குழுவிற்கு ஒருமனதாக முன்மொழிந்தபோது, தலைமைப் பொறுப்பையும் இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
பிராந்திய குழுக்களிடையே ஒரு வருடம் சுழற்சி முறையில் நடத்தப்படும் தலைவர் பதவிக்கு இந்த குழு பரிந்துரைத்தது. சீனாவின் வுஹானில் தோன்றி உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரோனா நோய்க்கிருமியை உலகம் எதிர்த்து போராடுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்....