எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் 18 வகையான நிவாரண பொருட்களை 40 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் வழங்கினார்..
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவதை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக முதலமைச்சரின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் நிவாரண பொருட்களின் அரிசி 4கிலோ, கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, சமையல் எண்ணெய் 200 மில்லி, துவரும் பருப்பு ,ஒயிட் பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 250 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், கொத்தமல்லி 100 கிராம், சாம்பார் தூள் 50.கிராம்,புளி, சலவை சோப்பு,டூத் பிரஷ், உள்ளிட்ட ரூபாய் 500 மதிப்பில் மளிகை பொருட்கள் அடங்கிய கிட் அஞ்சூர் கிராம் மக்கள் 40 பேருக்கு (27-4-2020) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் செல்வம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் துணை வேந்தர் சஞ்சீவ் ரெட்டி, மருத்துவர் திருமுருகன் , வியாபாரி சங்க தலைவர் எ.ஜி.டி.துரைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- உத்தமன்...