செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுக்காவிற்கு தமிழக அரசின் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் துவக்கி வைத்தார்..
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்யூர் தாலுக்கா, கடப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் பயன்பெரும் வகையில் தமிழக அரசின் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.ஜான் லூயிஸ் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.ஸ்ரீதர், செங்கல்பட்டு மாவட்ட சுகாதார இயக்குனர் மரு.ஜீவா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மரு.செந்தில்குமார், செங்கல்பட்டு 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் உதயநிதி, அவசரகால மேலாண்மை நிர்வாகி தேவராஜன் ஆகியோர் உள்ளனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...