வேலூரில் 1050 குடும்பங்களுக்கு மாளிகை பொருட்கள், கபசுர குடிநீர் வழங்கிய எம்பி கதிர் ஆனந்த்...
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மாளிகை பொருட்கள் இல்லாமல் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து
வேலூர் அடுத்த காட்பாடி ஒன்றியம் ஜாப்ராபேட்டை பகுதிக்கு சென்ற வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது சொந்த செலவில் 1050 ஏழை குடும்பங்களுக்கு அரிசி உட்பட மாளிகை பொருட்கள் மற்றும் முக கவசங்கள், கபசுர குடிநீர் வழங்கினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் சரவணன், மு.ஒன்றிய செயலாளர் தயாநிதி, ஊராட்சி கழக செயலாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...