வரலாறு மிகமுக்கியம் அமைச்சரே..
டைட்டானிக் பயணிகள் கப்பல் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன்துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை தொடங்கியது.
டைட்டானிக் கப்பலில் மொத்தம் 2,223 பயணிகள் இருந்தனர்.
இக்கப்பல் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது.
மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்ற தொழிலாளிகளே அதிகமாக இருந்தனர்.
முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர்.
புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயார்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது.
இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது.
(புறப்படும் போதே தடங்கல்)
டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாது எனவும் கருதப்பட்டது.
*அப்படிப்பட்ட ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது*
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
தமிழ் சுடரில் வரும் வரலாறு சுடரை...