முள்ளங்குறிச்சி ஊராட்சியில் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், அரிசி வழங்கிய ஊராட்சிமன்ற தலைவர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் முள்ளங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள சுமார்1500 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 10 நாட்கள் தேவையான காய்கறிகள் மளிகை சாமான்கள் ஆகியவற்றை முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவரும் தொழிலதிபருமான காந்திமதி முருகானந்தம் அப்பகுதி வசிக்கும் கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உதவிகளை வழங்கினார். அப்பகுதியில் மக்களிடையே கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், வீட்டிலேயே இருங்கள் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் ,சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், முக கவசம் அணியுங்கள், என்று கிராம மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார் பிறகு தூய்மைபணியாளர்கள் மற்றும் குடிநீர் தெருவிளக்கு பணியாளர்களுக்கு முககவசம் மற்றும் நிதி உதவி உணவு பலவகையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.பிறகு அவர் கூறுகையில் கொரோனா வைரஸ் இல்லாத ஊராட்சியை அமைய அனைவரும் பாடுபடுவோம் எனவும் கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு எந்தவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் பழனிவேலு கறம்பக்குடி வட்டாட்சியர் சேக் அப்துல்லா ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துராஜா கறம்பக்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி (கிராம ஊராட்சி) மற்றும் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...