கொரோனா நிவாரண நிதியாக 1 லட்சம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக நிர்வாகிகள் வழங்கினார்..
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் சட்டமன்றத் உறுப்பினர் வி.எஸ்.ராஜூ மற்றும் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான் லூயிஸிடம் வழங்கினார். இதில் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன் மற்றும் அன்பு, லிங்கேஸ்வரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- உத்தமன்...