வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு உதவி கரம் நீட்டிய அதிமுக நிர்வாகி..
வேலூர் மாவட்டம காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவின் போது காவல்துறை மருத்துவத்துறை சுகாதார துறை தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் இருந்து செய்திகளை உடனக்குடன் வெளியிட்டு மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களுக்கு வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி அ.இ.அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளரும் வேலூர் மாவட்ட துணை செயலாளருமான எஸ்.ஆர்.கே அப்பு மற்றும் காட்பாடி வட்டாச்சியர் பாலமுருகன், காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க பகுதி செயலாளர் ஜனார்தணன், பேரவை ரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் S.P.ராகேஷ், , பகுதி அம்மா பேரவை செயலாளர் அமர்நாத், டெல்லி பாபு, யுவராஜ், R.ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி. சரவணன்...