திருப்பத்தூர் அருகே உலக மகளிர் தினத்தை  முன்னிட்டு இராஜாவூர் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டி. தலைமை ஆசிரியர் இந்திரா பரிசுகள் வழங்கினார்.

திருப்பத்தூர் அருகே மகளிர் தினத்தை  முன்னிட்டு இராஜாவூர் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டி. தலைமை ஆசிரியர் இந்திரா பரிசுகள் வழங்கினார்.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் ராஜாவூர் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின்  பெற்றோர்களுக்கு   குறிப்பாக பெண்களுக்கு ஓட்டப் பந்தயம், கோணிப்பை பந்தயம், பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி என 10க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றது.


இப் போட்டியில் வென்ற பெற்றோர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.


இப்போட்டிகள் அனைத்தும் ராஜாவூர்  தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா தலைமையில் நடைபெற்றது.


போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் இந்திரா தன் சொந்த செலவில் ஊக்க பரிசுகளும் வழங்கினார்.


இந்த உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...


செய்திகள்- கோவி. சரவணன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image