கொரோனா  வைரஸ் காரணமாக  சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளைகளில் நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை...

 


  கொரோனா  வைரஸ் காரணமாக  சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளைகளில் நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை...


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஐகோர்ட்டில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வக்கீல் சங்க நிர்வாகிகள் முறையிட்டனர்.


இதையடுத்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.


இதில் ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம், வக்கீல் சங்க நிர்வாகிகள் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சுதா, கிருஷ்ணகுமார், லூயிஸ்சால் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட அவசர வழக்குகள் மட்டுமே நாளை முதல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். அதுவும் முக்கிய வழக்குகளை ஒரே நீதிபதி விசாரிப்பதற்கு பதில் பல நீதிபதிகளுக்கு வழக்குகளை பிரித்து கொடுத்து விரைவாக விசாரித்து முடிக்கப்படும்.


பொதுமக்கள், அரசு அதிகாரிகளை தேவையில்லாமல் ஐகோர்ட்டுக்குள் அனுமதிக்கூடாது. கோர்ட்டு அறைகளில் கூட்டம் அதிகம் இருக்க கூடாது என்பது உள்பட பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான உத்தரவு இன்று மாலையில் ஐகோர்ட்டு பிறப்பிக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்....


 


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image