ஆம்பூர் அருகே வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு அரிசி முட்டைகள் வழங்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டு...
அகில உலகத்தையும் தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா என்ற வைரஸ் தற்போது நமது பாரத நாட்டில் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பதால் அதனை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் நலன்கருதி நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பாஸ்கரன் என்பவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்க முடிவு செய்தார். அதன்படி 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அரிசி மூட்டைகளை வழங்கினார். இந்த சமூக சேவை பணியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசிவிசுவநாதன் மற்றும் கௌதமிசந்திரன் , பாரத் ,அரவிந்த்குமார் , சுப்பிரமணி மற்றும் குமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது... தற்போது மக்கள் தாங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் இந்த வேலையில் அவர்களின் கஷ்டங்களை அறிந்து சரியான நேரத்தில் சரியான உதவி செய்த நபர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இவர்களின் செயல் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்...
செய்திகள்- கோவி.சரவணன்...