வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் கொரோனா வைரஸ்(COVID-19) விழிப்புணர்வு கருத்தரங்கம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையம் இணைந்து கொரோனோ வைரஸ்(COVID-19) விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.இதில் திட்ட அலுவலர் முனைவர் முபாரக் அலி அனைவரையும் வரவேற்றார்.செயலர்,முனீர் அகம்மது,முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் முகம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதிகலந்து கொண்டு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை மிக இயல்பாகவும், இனிமையாகவும் எடுத்துரைத்து கை கழுவும் முறைகள் பற்றியும் மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்தார்.உடன் சுகாதார குழுவினர் இருந்தனர்.முடிவில் முனைவர் முஜூபுர் ரகுமான் நன்றி கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..
செய்திகள்- கோவி.சரவணன்...